21.05.2018
ஊத்தங்கரை
__________________________________________
குழந்தைகள், மாணவர்கள் அரசியல் பயிலரங்க கூட்டம்...
__________________________________________
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம், கீழ் குப்பத்தில் குழந்தைகள், மாணவர்களுக்கான அரசியல் பயிலரங்க கூட்டம் பேரவை யின் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது...
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேரவையின் நிறுவனத் தலைவர் மானமிகு தனியரசு அவர்கள் கலந்து கொண்டார்...
குழந்தைகள், மாணவர்கள் அரசியல் பற்றிய தங்களது கருத்துகளை பதிவு செய்த பிறகு மானமிகு தனியரசு அவர்கள் பேசுகையில்...
இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் எக்காரணம் கொண்டும் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்க கூடாது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, பொய் பேச கூடாது, ஒருவரை ஒருவர் ஏமாற்ற கூடாது, நம்முடைய இளைஞர்கள் பெரும்பாலும் மதுபழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது வேதனை அளிக்கிறது, மாறாக இளைஞர்களும், மாணவர்களும், குழந்தைகளும் அரசியல் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும், எதிர்காலத்தில் நமக்கான அரசியல் மாற்றங்களை நாமே தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், தமிழ் மொழி பற்றிய நூல்கள், புத்தகங்கள், பிற வரலாற்று புத்தகங்கள், இந்திய விடுதலை வித்திட்ட உத்தம தியாகிகள் தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் வரலாறுகளையும் அவசியம் படிக்க வேண்டும், அரசியல் அமைப்புக்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தினம்தோறும் நாளிதழ் செய்திகளை படிக்க வேண்டும், அன்றாட அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும், இயன்றவரை நன்றாக படிக்க வேண்டும், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கின்ற அரசியலில் நாம் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று பேசினார்...
__________________________________________
✿════✿ தனியரசு ✿════✿
┈┉━✿ த҉மி҉ழ்҉ செ҉ய்҉தி҉க҉ள்҉҉ ✿━┉┈
*✆ +҉҉҉ 9҉҉҉ 8҉҉ 4҉҉҉ 2҉҉ 2҉҉ 0҉҉҉ 2҉҉ 4҉҉҉ 4҉҉҉ 5҉҉҉*
*✆ +҉҉҉ 9҉҉҉ 3҉҉҉ 4҉҉҉ 5҉҉ 2҉҉ 1҉҉҉ 2҉ 3҉҉ 8҉҉ 5҉҉*
__________________________________________