Total Pageviews
Sunday, December 16, 2018
Thursday, June 14, 2018
புதிய தலைமுறை மீதான வழக்கை திரும்பப்பெற சட்டப்பேரவையில் தீர்மானம் – தனியரசு
மதக்கலவரம் உருவாக் முயற்சித்த பாஜக! முறியடித்த கொங்கு இளைஞர்கள்!!
தங்கும் விடுதியில் தனியரசு, அமீர், பாலகிருஷ்ணன் ஆகியோர்
|
பாஜக வினரால் தாக்கப்பட்ட மகிழுந்து |
நாங்க இல்லாம யாரும் இந்த மண்ணுல இந்து கிடையாது - தனியரசு
பெரியப்பட்டி கிளை |
பெரியப்பட்டி கிளை |
|
வரவேற்பு பதாகை |
Friday, May 25, 2018
இயக்க இல்ல திருமண வரவேற்பு விழா... தனியரசு எம்.ஏ., எம்.எல்.ஏ., பங்கேற்பு...
_____________________________________
_____________________________________
_____________________________________
____________________________________
Tuesday, May 22, 2018
குழந்தைகள் மாணவர்கள் அரசியல் பயிலரங்க கூட்டம்... 21.05.2018
21.05.2018
ஊத்தங்கரை
__________________________________________
குழந்தைகள், மாணவர்கள் அரசியல் பயிலரங்க கூட்டம்...
__________________________________________
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் சார்பில் ஊத்தங்கரை ஒன்றியம், கீழ் குப்பத்தில் குழந்தைகள், மாணவர்களுக்கான அரசியல் பயிலரங்க கூட்டம் பேரவை யின் நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யபட்டு இருந்தது...
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பேரவையின் நிறுவனத் தலைவர் மானமிகு தனியரசு அவர்கள் கலந்து கொண்டார்...
குழந்தைகள், மாணவர்கள் அரசியல் பற்றிய தங்களது கருத்துகளை பதிவு செய்த பிறகு மானமிகு தனியரசு அவர்கள் பேசுகையில்...
இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் எக்காரணம் கொண்டும் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்க கூடாது, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, பொய் பேச கூடாது, ஒருவரை ஒருவர் ஏமாற்ற கூடாது, நம்முடைய இளைஞர்கள் பெரும்பாலும் மதுபழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது வேதனை அளிக்கிறது, மாறாக இளைஞர்களும், மாணவர்களும், குழந்தைகளும் அரசியல் பற்றிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும், எதிர்காலத்தில் நமக்கான அரசியல் மாற்றங்களை நாமே தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், தமிழ் மொழி பற்றிய நூல்கள், புத்தகங்கள், பிற வரலாற்று புத்தகங்கள், இந்திய விடுதலை வித்திட்ட உத்தம தியாகிகள் தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் வரலாறுகளையும் அவசியம் படிக்க வேண்டும், அரசியல் அமைப்புக்கள் பற்றிய தகவல்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தினம்தோறும் நாளிதழ் செய்திகளை படிக்க வேண்டும், அன்றாட அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும், இயன்றவரை நன்றாக படிக்க வேண்டும், நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கின்ற அரசியலில் நாம் நேரடியாக பங்கேற்க வேண்டும் என்று பேசினார்...
__________________________________________
✿════✿ தனியரசு ✿════✿
┈┉━✿ த҉மி҉ழ்҉ செ҉ய்҉தி҉க҉ள்҉҉ ✿━┉┈
*✆ +҉҉҉ 9҉҉҉ 8҉҉ 4҉҉҉ 2҉҉ 2҉҉ 0҉҉҉ 2҉҉ 4҉҉҉ 4҉҉҉ 5҉҉҉*
*✆ +҉҉҉ 9҉҉҉ 3҉҉҉ 4҉҉҉ 5҉҉ 2҉҉ 1҉҉҉ 2҉ 3҉҉ 8҉҉ 5҉҉*
__________________________________________
Tuesday, May 8, 2018
அஸ்சாம் மாநிலத்தில் தனியரசு
சட்டமன்ற ஆய்வு கூட்டத்தில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் மானமிகு #தனியரசு அவர்கள் கலந்து கொண்டு #அஸ்சாம் சட்டமன்றத்தை பார்வையிட்டார்...
#அஸ்சாம்_மாநிலம்
07.05.2018
Monday, May 7, 2018
நீட் விஷயத்தில் மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை போயுள்ளது: தனியரசு குற்றச்சாட்டு
Posted By: T Nandhakumar
Updated: Sun, May 6, 2018, 18:23 [IST]
கோவை: நீட் தேர்வு மையம் அமைப்பதில் மத்திய அரசிற்கு தமிழக அரசு துணை போயுள்ளதாக கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவன தலைவர் தனியரசு குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த தனியரசு அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
நீட் கட்டாயம் என்பதே தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்தது. மாநில அரசு மத்திய அரசிற்கு நீட் மையம் அமைப்பதில் நெருக்கடி கொடுக்காமல் துணை போனது. நீட் தேர்வு மையம் வெளி மாநிலத்தில் கிடைத்த மாணவர்கள் உளவியல் ரீதியாகவும், மொழி , சூழ்நிலையால் மிகுந்த பாதிப்படைந்துள்ளனர். எர்ணாகுளத்தில் தேர்வு எழுத சென்ற மாணவனின் தந்தை இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழர்களின் உரிமைகள் மற்றும் உயிரை பறிக்கும் பாஜக மன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்கிறது. இந்த விஷயத்தில் மாநில அரசின் இயலாமையை கண்டிக்கிறேன்.
தமிழகத்திலுள்ள ஏழு கோடி தமிழர்களும் சாதி, மதம், அரசியல் கடந்து நமது உரிமைகளுக்காக நீட்டை ஒழிக்கும் வரை போராட வேண்டும். இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை பாஜக கேள்வி குறியாக்கியுள்ளது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசிற்கு மாநில அரசு துணை போவதாக சந்தேகம் இருக்கிறது. முதலமைச்சர் மாநில உரிமைகாக அறவழிப்போராட்டம் நடத்தியிருந்தால் தேசம் தழுவிய கவனத்தை ஈர்த்து இருக்கும்.
மாநில உரிமை மீட்டெடுக்கும் வகையில் அவர் செயல்பட வேண்டும். நீட் தேர்விற்கு அனுமதிக்கும் போது மாணவர்களின் கையில் கட்டியுள்ள கயிறு, மத ரீதியாக உடுப்புகளை களைவது, வளையலை உடைப்பது ஜனநாயக போக்கிற்கு எதிரானது. இந்த ஏதேச்சை அதிகார போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சரை மோடி சந்திக்க நிராகரித்தால் அறவழியில் இருவரும் மத்திய அரசை கண்டித்து போராட வேண்டும். இதை தமிழர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டிய அதிமுகதான் முன்னெடுக்க வேண்டும். சட்டமன்றத்தில் போடப்பட்ட தீர்மானங்களையும், காவிரிக்கு எதிரான அனைத்து கட்சி தீர்மானத்தையும் மதிக்காத மத்திய அரசை கண்டித்து வலிமையான போராட்டத்தை மாநில அரசு முன்னெடுக்க வேண்டும் என்றார்.
#தனியரசு
#கோவை
06.05.2018
Sunday, May 6, 2018
விவசாயிகள் மாநாடு தனியரசு Mla பங்கேற்பு...
விவசாய நிலங்களில் உயர் அலுத்த மின்கோபுரம் அமைக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் கங்கேயம் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு அவர்கள் கலந்துகொண்டு கண்டன உறையாற்றினார்...
06.05.2018
ஈரோடு
Saturday, May 5, 2018
தனியரசு Mla பங்கேற்கும் அறம் பேசு...
06.05.2018 (ஞாயிறு) இரவு 08.00 மணிக்கு வெளிச்சம் தொலைக்காட்சி யில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவனத் தலைவர் மானமிகு தனியரசு அவர்கள் கலந்து கொண்ட அறம் பேசு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது காணத்தவறாதீர்கள்...
Thursday, May 3, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆர்ப்பாட்டம், தனியரசு Mla பங்கேற்பு...
சென்னை சேப்பாக்கத்தில் மக்கள் அரசு கட்சியின் பொதுசெயலாளர் ஏ. பி. எஸ். செந்தில் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் நிறுவனத்தலைவரும், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினருமான மானமிகு "தனியரசு" அவர்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, தோழர் தியாகு மற்றும் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்புச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்...
--------------------------------------------------------
03.05.2018
சேப்பாக்கம், சென்னை.
--------------------------------------------------------
https://twitter.com/K_Tamil_Arasan/status/991988183272321024?s=19
--------------------------------------------------------
https://www.instagram.com/p/BiT_rY7DrXv/
--------------------------------------------------------
https://wp.me/p17BBw-1A
--------------------------------------------------------
பேச : 9842202445, 9345212385.
--------------------------------------------------------
Thursday, September 8, 2016
Wednesday, July 3, 2013
Wednesday, April 17, 2013
தீரன் சின்னமலை சிலைக்கு ஜெயலலிதா மலர்தூவி மரியாதை, விழா மலரையும் வெளியிட்டார்.
சென்னை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி சென்னை, கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா, மலர் தூவி மரியாதை செலுத்தி, விழா மலரையும் வெளியிட்டார்.
விழாவில் பங்கேற்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்ற கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள்
மற்றும் பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்த தொண்டர்கள்
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாய்...
இந்திய விடுதலை போரில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போராடியவர் தீரன் சின்னமலை. சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் ‘‘இடையே ஒரு சின்னமலை’’ என்று போற்றப்பட்டவராய், தீரத்துடன் செயல்பட்டு ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றி நினைவு கூறும் வகையிலும், அவரது வீரதீர செயல்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளத்தக்க வகையிலும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தீரன் சின்னமலைக்கு வெண்கலச் சிலை அமைத்தல், மணி மண்டபம் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கிண்டியில் உள்ள சிலை புனரமைப்பு
சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலை பொலிவிழந்தும் அதன் பீடம் மற்றும் சுற்றுப்புறத் தரை மிகவும் சிதிலமடைந்தும் இருந்ததை சீர்செய்து, தற்போது 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவச் சிலை வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டதுடன் அதன் சுற்றுப்பகுதியின் பாதுகாப்புக்கு அலங்கார கிரில், மதில்சுவர் அமைக்கப்பட்டு தரையில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு விவரங்கள் அடங்கிய பலகை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
மலர்தூவி மரியாதை
மேலும், தீரன் சின்னமலையின் 258–வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, தீரன் சின்னமலை பேரவை சார்பாக தொகுக்கப்பட்ட தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா மலரை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட, சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான உ.தனியரசு பெற்றுக்கொண்டார்.
அமைச்சர்கள்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பழனியப்பன், செந்தில்பாலாஜி, தாமோதரன் உள்பட அமைச்சர்கள், மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், செந்தமிழன், மகளிர் மேம்பாட்டு ஆணைய தலைவி டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், அரசு உயர் அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தீரன் சின்னமலை சிலைக்கு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, சென்னை மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக பொதுச்செயலாளர் ச.இசக்கிமுத்து மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..
ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு
கிண்டி மேம்பாலத்தில் இருந்து ஏறக்குறைய 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, அ.தி.மு.க., கொங்கு இளைஞர் பேரவை கொடிகளும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று மிகப்பெரிய தட்டிகளும் வைக்கப்பட்டு இருந்தது. சாலையின் இருபுறமும், கொங்கு இளைஞர் பேரவை கொடியை கையில் உயர்த்திப்பிடித்தவாறு, கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள் ஏராளமானோர் ஜெயலலிதாவை வரவேற்பதற்காக காத்திருந்தார்கள். விழா நடைபெற்ற இடத்துக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வந்ததும், அங்கு திரண்டிருந்த கொங்கு இளைஞர் பேரவையினர் விண்அதிர வாழ்த்துமுழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றார்கள்.
விழாவில் பங்கேற்று, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்ற கொங்கு இளைஞர் பேரவை தொண்டர்கள்
மற்றும் பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்த தொண்டர்கள்
மலர்தூவி மரியாதை