டாஸ்மாக் மதுக் கடைகளை மூட கொங்கு இளைஞர் பேரவை வலியுறுத்தல்
01 Mar 2010 07:35:00 AM IST
01 Mar 2010 07:35:00 AM IST
தருமபுரி, பிப். 28: தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
பேரவையின் தருமபுரி மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி பெரியார் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மாநில அமைப்பின் இறுதி முடிவை ஏற்பது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிகரித்துவரும் என்கவுண்டர்கள் குறித்து ஆய்வு செய்ய நீதிபதிகள் குழு அமைக்க வேண்டும். தருமபுரியில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கூட்டத்துக்கு மாநில
செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி கவுண்டர் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் உ.தனியரசு. மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், நகர அமைப்பாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் பேசினர்.
© Copyright 2008 Dinamani